ஸ்ரீவைகுண்டம் த.வெ.க முன்னாள் பெண் நிர்வாகி கூட்டு பாலியல் வழக்கில் திடீர் திருப்பம். வழக்கில் புகார்தாரான பெண் சமரசமாக செல்வதாக நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில் வழக்கு ரத்து செய்யப்பட்டது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தமிழக வெற்றி கழகத்தில் நிர்வாகியாக இருந்தார்.. மே 3ல் வேலைவாங்கி தருவதாக கூறி பாலசுப்பிரமணியம், ஜெயபால் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக, மே மாதம் 3ம் தேதி ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகைரளிக்கப்பட்ட நிலையில் ஜூன் 1ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குற்றம் சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியம் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரும் கேரளா அருகே கைது செய்யப்பட்டனர் இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ மீதும் குற்றச்சாட்டு எழுந்தது; ஆனால், எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டை மறுத்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, இருவருக்கு மட்டுமே தொடர்பு என உறுதி செய்தது இந்நிலையில், புகார் அளித்த பெண்ணும், கைதான இருவரும் சமரசமாக செல்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்தனர் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, புகார்தாரர் சமரசமாக செல்ல முடிவு செய்திருப்பதால் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது
Back to Top News
Top
September 5, 2026 at 1:35 PM
ஸ்ரீவைகுண்டம் பெண் நிர்வாகி கூட்டு பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்.
Polimer News