சென்னை பாண்டிபஜாரில் கஞ்சா வியாபாரி கமலக்கண்ணன் என்பவர் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு போலீசார் நடத்திய சோதனையில், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 7 கிலோ எடையுள்ள ஆம்பர்கிரீஸ் எனப்படும் திமிங்கில எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கமலக்கண்ணன் வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்தியதில், 9 கிலோ கஞ்சாவும் திமிங்கில எச்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. கமலக்கண்ணனை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், திமிங்கில எச்சத்தை அவரிடம் கொடுத்துவைத்திருந்ததாக அசோக்குமார், செல்லத்துரை ஆகியோரையும் கைது செய்தனர்.
Back to Top News
Top
September 6, 2026 at 10:49 AM
கஞ்சா வியாபாரி வீட்டில் ரூ.7 கோடி மதிப்புள்ள திமிங்கில எச்சம் பறிமுதல்..!
Polimer News