தமிழகத்தில் 2,500 செவிலியர்கள் பணி நிரந்தர அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், 4,724 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் 8-வது மாநில மாநாடு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர் அருண் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். செவிலியர்கள் வழங்கிய கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும் என்றும், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் தகுதி அடிப்படையில் புதிய செவிலியர்கள் கல்லூரியில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். பணம் கொடுத்தால் பணி மாறுதல், பணி நியமனம் பெசற்று தருகிறோம் என்று சொன்னால் யாரும் நம்பாதீர்கள், முழுக்க முழுக்க வெளிப்படைதன்மையாக பணி நியமனம் மற்றும் பணி மாறுதல் நடைபெறும் பணி நியமனம் தொடர்பாக யாராவது பணம் கேட்கிறார்கள் என்று புகார் வந்தால் மாவட்ட சுகாதார அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.