கும்பகோணம் பாலக்கரை அருகே 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து குதறியதில் காயமடைந்த முதியவர் சின்னதுரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனியார் பள்ளி அருகே சாலையோரம் இருந்த முதியவர் சின்னதுரையை 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒரே நேரத்தில் கடித்து குதறும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அவ்வழியாக ஆட்டோவில் சென்ற பயணி முதியவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.