சென்னை தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏவாகவும், அமைச்சராகவும் இருந்தும் தம்மால் தமது தொகுதி மக்களுக்குத் தேவையான குடிநீர், கழிவுநீர், மின்சாரம் உள்ளிட்ட பணிகளைச் செய்துதர முடியவில்லை என்று அமைச்சர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தாம்பரம் கடப்பேரி அருகே நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், பணிகளை மேற்கொள்ளச் செல்லும் அதிகாரிகளை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தடுத்து நிறுத்துவதாகவும் குற்றம் சுமத்தினார்.