தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் 10 நாட்கள் நடைபெறும் 444ஆவது திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. பேராலய பங்கு தந்தை ஜான் செல்வம் தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலிக்குப் பிறகு பனிமய மாதாவின் உருவம் பொறித்த கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் "மரியே வாழ்க" என்று முழக்கமிட்டு பிரார்த்தனை செய்தனர். இந்நிகழ்வில் அமைச்சர்கள் ஸ்ரீநாத், சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருவிழாவின் சிகர நிகழ்வான பனிமய மாதா சப்பர பவனி ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது.