தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரலில் சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் 185 மெட்ரிக் டன் யூரியா உர மூட்டைகள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கிடங்குக்கு வேளாண்மைத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அதிகாரிகளின் புகாரின் பேரில் சீனிவாசன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்