சட்டப்பேரவையில் ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க் கட்சி உறுப்பினர்களும் தனிநபர் விமர்சனங்கள் செய்து வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ காவேரி உட்பட பல்வேறு கட்சியினர் பாமகவில் இணைந்த பிறகு பேட்டி அளித்த அவர், சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் ஒரே கட்சி பாமக தான் என்றார் . காவிரி பிரச்சனையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட முதலமைச்சர் விஜய் முன்வர மறுக்கிறார் என்றும் அன்புமணி குற்றச்சாட்டு