இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காக தன்னலம் கருதாது பணியாற்றி வரும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் தனது இதயங்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் மனங்களில் அறிவொளியை ஏற்றி, ஒழுக்கம், மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு உள்ளிட்ட உயரிய நற்பண்புகளை விதைத்து வருவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் கனவுகளுக்கு சிறகளித்து, அவர்களின் திறமைகளுக்கு வழிகாட்டுவதோடு, எதிர்கால வாழ்க்கைக்கான வலுவான அடித்தளத்தையும் ஆசிரியர்கள் அமைத்துத் தருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்கு நாட்டின் வளர்ச்சியோடு ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தையும் கட்டமைக்கும் உன்னதப் பணியை ஆசிரியப் பெருமக்கள் மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். ஆசிரியர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், சிறந்த வழிகாட்டுதலும் மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் ஒளிமயமாக்கட்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தையொட்டி, மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆசிரியர்களின் மகத்தான பணிகளைப் போற்றுவோம் என முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Back to Top News
Top
September 5, 2026 at 4:31 AM
மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்காக தன்னலம் கருதாது ஆசிரியப் பெருமக்கள் பணியாற்றிவருவதாக முதலமைச்சர் விஜய் ஆசிரியர் தின வாழ்த்து...
Polimer News