பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கான்கிரீட் தளத்தை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த லாரியின் மீது, சென்னையில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலை நேரம் நடந்த இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இரண்டு பயணிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் உட்பட ஆறு பேரை, பெரம்பலூர் போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.