வாணியம்பாடி அருகே சிறுவனை நாய் கடித்துக் குதறிக் கொண்டிருந்த போது பெண் ஒருவர் சாவகாசமாக வந்து நாயை விரட்ட முயற்சித்த காட்சி காண்போரை கோபமடையச் செய்யும் வகையில் உள்ளது. நிம்மியம்பட்டு பஜனை கோவில் பகுதியைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுவனை தெருநாய் ஒன்று கடித்துக் குதறிய போது பெண் ஒருவர் சாவகாசமாக வந்து விரட்ட முயற்சித்த நிலையில், வேறொருவர் வந்து நாயை விரட்டினர். அந்த நாயை ஊர்மக்கள் சேர்ந்து அடித்துக் கொன்ற நிலையில், பலத்த காயம் அடைந்ததில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Back to Top News
Top
July 20, 2026 at 9:37 AM
விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனை கடித்துக் குதறிய தெருநாய்..!
Polimer News