இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவது போன்றவை மூலம் நாட்டின் இளம் தலைமுறையினருடன் நெருக்கமான இணைப்பில் இருக்க மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்களில் எத்தனை பேர் இன்ஸ்டாகிராம் தளத்தை ஆக்டிவாக பயன்படுத்தி வருகிறார்கள் என பிரதமர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. கோடிக்கணக்கான இளைஞர்கள் தினமும் அந்த தளத்தைப் பயன்படுத்துவதாக குறிப்பிட்ட பிரதமர், மத்திய அரசின் பணிகள் குறித்து மக்களுக்குத் தெரிவிப்பது மட்டுமின்றி, இளைஞர்களுடன் கலந்துரையாடவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி வியாழக்கிழமை இரவு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு, காகிதக் கசிவு வழக்குகளைக் கையாள விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
Back to Top News
Top
July 25, 2026 at 4:49 AM
இன்ஸ்டா மூலம் கலந்துரையாட அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை..!
Polimer News