பட்ஜெட்டில் கசிவு என நிறைய முறை குறிப்பிட்ட கசிவு என்றால் என்ன என தங்களுக்கு தெரியவில்லை எனக்கூறிய ரகுபதிக்கு, கசிவு என்றால் என்ன என முதலமைச்சர் விஜய் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வார் என நிதி அமைச்சர் மரியவில்சன் பதிலளித்தார். பின்னர் நீர்வளத்துறையில் ஊழல் இருப்பதாக ரகுபதி கூறிய நிலையில், கமிசன் வாங்கினால் எங்கள் தலைவர் சும்மாவிடமாட்டார் என அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பதிலளித்தார். பின்னர், பொதுப்பணித்துறையில் 5 சதவீத கமிசன் வாங்குவதாக ரகுபதி கூறியபோது, தவெக ஆட்சியில் Party Fund, Minister Fund இல்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார். தி.மு.க அரசு செயல்படுத்திய திட்டங்களில் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என ரகுபதி பேசிய நிலையில், தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் மீதும் ரூ.1.28 லட்சம் கடனை விட்டுச் சென்ற இடத்திலும் அவர் இருக்கிறார் என அமைச்சர் மரிய வில்சன் பதிலளித்தார். அப்போது குறுக்கீடு செய்த கே.என்.நேரு தி.மு.க. ஆட்சியில் கடன் வாங்கியதை பார்க்காதீர்கள், திட்டங்களை பாருங்கள் என்றார்.