நெல் கொள்முதலில் குவிண்டாலுக்கு 325 ரூபாய் பறிக்கப்படுவதை தடுத்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வது தான் விவசாயிகளுக்கு பெரும் துயரமாக மாறியிருப்பதாகவும் கொள்முதல் நிலையங்களில் ஒரு வாரம் காத்திருக்கும் சூழல் மற்றும் ஊழல் தொடர்வதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 40 கிலோ எடை கொண்ட நெல் மூட்டையை எடை வைத்து கொள்முதல் செய்வதற்கு லஞ்சமாக 40 முதல் 60 ரூபாய், பதர்களைத் தூற்றுவதாகக் கூறி ஒன்றரை கிலோ வரையிலான நெல்லை ஒதுக்குவதன் வாயிலாக 3 கிலோ நெல் கூடுதலாக வாங்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுவதாக அன்புமணி கூறியுள்ளார். நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் சுரண்டலை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் விவசாயிகள் தவெகவுக்கு வாக்களித்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Back to Top News
Top
July 21, 2026 at 10:00 AM
சுரண்டலை ஒழிக்கவே விவசாயிகள் வாக்களித்தனர்..! - அன்புமணி
Polimer News