தேர்தலில் வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டு, தமிழகத்திற்கு சீமான் ஒரு தவிர்க்க முடியாத தலைவர் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி விக்டோரியா கெளரி தெரிவித்துள்ளார். யூ டியூபர் பிஸ்மி என்பவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சீமான் 100 கோடி ரூபாய் பெற்றதாக அவதூறு பரப்புவதாகவும், அதே போல் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை சிலர் பரப்புவதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி விக்டோரியா கவுரி முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், முதலமைச்சர் குறித்து அவதூறு பேசியதால் திமுக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்கும் காவல் துறை ஏன் சீமான் மீதான அவதூறுக்கு நடவடிக்கைக்கு எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.