சிலியின் கொகும்போ (Coquimbo) பிராந்தியம் மற்றும் உவாஸ்கோ மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1 லட்சத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வெளிப்புறத் தொடர்புகளின்றி தனித்துவிடப்பட்டுள்ளதை அடுத்து, அதிபர் ஹோசே அந்தோனியோ காஸ்ட் அங்கு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரக்குகள் மூலம் மக்களை மீட்பதோடு, நிவாரணப் பணிகளையும் மீட்புக் குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.