வெளிநாட்டில் மனைவி லிவிங் வாழ்க்கை...! கடந்த 6 வருடங்களுக்கு முன்பு, சிரஞ்சினிக்கு அரபு நாட்டில் வேலை கிடைத்ததால் அவர் அங்கு சென்றுள்ளார். ரஞ்சிஷ், தனது மகனை பார்த்து வந்துள்ளார். வெளிநாடு சென்ற மனைவி சிரஞ்சினி கணவனுடன் போனில் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து வந்துள்ளார். பின்னர், சிரஞ்சினி வேறொரு ஆணுடன் அங்கு லிவ்விங் உறவில் இருந்தது கணவனுக்கு தெரியவந்தது. வேறொரு நபரோடு இருக்கும் புகைப்படங்களை சிரஞ்சினி, தனது கணவர் ரஞ்சிஷ் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு..! காதல் மனைவி போனால் என்ன தன் மகன் இருக்கிறானே என்ற எண்ணத்தில் மகனுடன் தனது வாழ்க்கையை ரஞ்சிஷ் தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்பு, சொந்த ஊருக்கு வந்த மனைவி சிரஞ்சனி கணவர் ரஞ்சிஷ்க்கு எதிராக கட்டப்பனை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், தனது மகனை தன்னிடம் ஒப்படைக்க கோரியும் மனு அளித்துள்ளார். குடும்ப நல வழக்கை விசாரித்த கட்டப்பனை நீதிமன்றம், கடந்த சில நாட்களுக்கு முன்பு, மகன் தாயுடன் இருப்பதுதான் பாதுகாப்பு என கூறி ரஞ்சிஷிடம் இருந்து மகனை தாய் சிரஞ்ஜனியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. மனைவிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு விபரீத முடிவு..! காதல் திருமணம் செய்து கொண்ட மனைவி கைவிட்டாலும், மகன் இருக்கிறான் என வாழ்ந்து வந்த ரஞ்சிஷ், தற்போது மகனும் தன்னை பிரிய போகிறான் என்ற வேதனையில், தனது மனைவிக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பி வைத்து விட்டு, ரஞ்சிஷ் விஷம் அருந்தியுள்ளார். ரஞ்சிஷை மீட்ட அப்பகுதியினர் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதியன்று ரஞ்சிஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். "நீதி வேண்டும்" - நெட்டிசன்கள் இந்த சம்பவம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில்,நெட்டிசன்கள் பலரும், ரஞ்சிஷ் மரணத்திற்கு நீதி வேண்டும் என இணையத்தில் போராடி வருகின்றனர்.