சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் பகுதியில், தலைமைக் காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள தமிழழகு மற்றும் அவரது நண்பர் ஆகாஷ் இருவரும், காவனூர் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை சுற்றிவளைத்தனர். அப்போது தலைமைக் காவலர் விஜயகுமாரை கத்தியால் வெட்டிவிட்டு தமிழழகு தப்ப முயன்றபோது, உதவி ஆய்வாளர் மணிகண்டன் அவரை துப்பாக்கியால் சுட்டார். உடன் இருந்த ஆகாஷையும் போலீசார் மடக்கி பிடித்தனர். காயமடைந்த தலைமைக் காவலர் மற்றும் ரவுடி இருவரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ((முன்விரோதம் காரணமாக ஒருவரை தீர்த்துக்கட்ட ரவுடிகள் இருவரும் நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாகக் கூறப்படுகிறது
Back to Top News
Top
July 19, 2026 at 7:09 AM
நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது ரவுடிகளை சுற்றிவளைத்த போலீசார்.. தலைமைக் காவலரை கத்தியால் வெட்டிவிட்டுத் தப்ப முயன்ற ரவுடி
Polimer News