சிவகாசி அருகே சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஆலை உரிமையாளர் உள்ளிட்ட இருவர் உடல் சிதறி உயிரிழந்தனர். செங்கமலப்பட்டியில் ராம்பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் தகர செட் அமைத்து பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இந்த ஆலையில் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறும் காகித வெடி தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அங்கு இன்று காலை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராம்பிரகாஷ் மற்றும் இன்னாசிமுத்து ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர். ராம்பிரகாஷின் சகோதரரான ராமச்சந்திரன் என்பவர் 90% தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Back to Top News
Top
July 26, 2026 at 6:22 AM
சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து
Polimer News