தமிழகத்தில் இயக்கப்படும் வந்தேபாரத் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும் வட இந்தியத் தயாரிப்பு கடலை மிட்டாய்க்குப் பதிலாக கோவில்பட்டி கடலை மிட்டாய் வழங்க அதன் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புவிசார் குறியீடு பெற்று பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோவில்பட்டி கடலை மிட்டாயை வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.