பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக வெள்ளி ஜரிகை வைத்தது போன்ற புடவைகள் தயாராகி வருவதாக கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த அவர், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வேட்டி, சேலைகள் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.