தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான ஒரு அமைப்பாக we the leaders அமைப்பு இருக்கும் என்று அதன் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை எழும்பூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் பேசிய அவர், தமிழகத்தில் ஆளுங்கட்சியை கவிழ்த்து ஆட்சியமைக்க வேண்டும் என்பதுதான் எதிர்கட்சிகளின் எண்ணமாக உள்ளதாக விமர்சித்தார். தமிழகத்தில் புரட்சி நடந்து, ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு வேலை செய்ய ஒரு வருடம் வழங்க வேண்டும் என்றும், அதன் பிறகு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். கர்நாடகவில் மேகதாது அணை கட்ட அனுமதியில்லை என்று 2021 ஆம் ஆண்டு கூறிய மத்திய அரசு, தற்போது அணை கட்டுவதற்கு பிரச்சினையில்லை என கூறுவது உண்மையில் நெஞ்சு வலிப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.
Back to Top News
Top
August 17, 2026 at 5:42 AM
இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி வீ தி லீடர்ஸ் அமைப்பினர் பேரணி..!
Polimer News