புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இருந்து மது பாட்டில்களை காரில் கடத்திவந்த பரவக்கோட்டை தலைமைக் காவலர் கார்த்திகேயன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். திருவாரூர் வாளவாய்க்கால் பகுதியில் மதுவிலக்கு போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கார்த்திகேயன் உள்ளிட்ட 3 பேர் வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, காரில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள 300-க்கும் மேற்பட்ட புதுச்சேரி மது பாட்டில்கள் இருந்தன. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டு, மது பாட்டில்கள் மற்றும் காரும் பறிமுதல் செய்யப்பட்டன.