சென்னை தியாகராயநகரில் பைக்கில் சென்ற வங்கி ஊழியரை வழிமறித்து கத்தி முனையில் 11 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்ததாக வழக்கறிஞர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். கார்த்திகேயன் என்ற அந்த நபர் கடந்த 16ஆம் தேதி இரவு பாரிமுனையிலுள்ள தனது உறவினரிடம் 12 லட்சம் ரூபாயைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டுள்ளார். 12 லட்சத்தில் ஒரு லட்சத்தை பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்ததால் அது மட்டும் தப்பியுள்ளது. கொள்ளையடிக்கப்பட்டது ஹவாலா பணம் என்று கைதானோர் தெரிவித்த நிலையில், கார்த்திகேயனிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Back to Top News
Top
September 18, 2026 at 5:15 AM
சென்னை தி.நகரில் கத்தி முனையில் ரூ.11 லட்சம் கொள்ளை - 4 பேர் கைது
Polimer News