ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மத்திய அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கிய நிலையில் அதில் ஆயிரத்து 127 கோடி ரூபாயை மாநில அரசுத் துறைகளின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்து 240 கோடி ரூபாய் அளவுக்கு வட்டியாகப் பெற்றது சிஏஜி அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வட்டிப் பணத்தில் 149 கோடி ரூபாய் திட்டங்களுக்காக செலவிடப்பட்டதாகவும் 11 கோடி ரூபாயை தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் வைத்துக் கொண்டதாகவும் சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2015 முதல் 2023ஆம் ஆண்டு வரை 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் விதிமீறல்கள், நிதி மடைமாற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரத்து 602 கோடி ரூபாய் மதிப்பிலான 52 திட்டங்கள் முன்மொழியப்பட்ட போதிலும் அவை மேற்கொள்ளப்படவில்லை என சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 623 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்படாத 44 பணிகள் செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. 184 கோடி ரூபாய் மதிப்பிலான 21 பணிகள், அனுமதி பெற்ற இடங்களுக்கு முற்றிலும் வெளியே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Back to Top News
Top
September 9, 2026 at 7:28 AM
ரூ.10000 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் - விதிமீறல்கள் என்ன?
Polimer News