சென்னை பனையூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தவெக தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என பெயரிட முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். வரவுள்ள அரசியல் நடவடிக்கைகள் மற்றும் கூட்டணியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைமையில் உருவாகியுள்ள இந்த புதிய கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி” என பெயர் சூட்டப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.