கூடலூரில் இருவரை கொன்ற ஆட்கொல்லி புலி கூண்டில் சிக்கியது.! சென்னைக்கு கொண்டு வர திட்டம் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இரண்டு பேரை கொன்ற ஆட்கொல்லி புலி, வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. புலியை சென்னைக்கு கொண்டு வந்து வண்டலூர் வனவிலங்கு மறுவாழ்வு மையத்தில் பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு தோட்டத் தொழிலாளர்கள் உயிரிழப்பு நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட லார்ஸ்டன் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 9 மற்றும் 21ஆம் தேதிகளில் இரண்டு தோட்டத் தொழிலாளர்களை புலி அடித்துக் கொன்றது. இதையடுத்து, ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். 244 தானியங்கி கேமராக்கள், 13 கூண்டுகள் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 244 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும், புலியை பிடிப்பதற்காக 13 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், வட்டப்பாறை பகுதியில் வனத்துறை வைத்திருந்த கூண்டில் புலி சிக்கியது. பிடிபட்ட புலி, இருவரை கொன்ற ஆட்கொல்லி புலிதான் என்பதை வனத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். சென்னைக்கு கொண்டு வர திட்டம் பிடிபட்ட ஆட்கொல்லி புலியை சென்னைக்கு கொண்டு வந்து வண்டலூர் வனவிலங்கு மறுவாழ்வு மையத்தில் பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புலியின் பற்கள் உடைந்திருப்பதால், அதனால் இயல்பாக வேட்டையாட முடியாத நிலை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், புலியை வனப்பகுதியில் மீண்டும் விடுவதற்குப் பதிலாக மறுவாழ்வு மையத்தில் பாதுகாப்பாக பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வண்டலூர் வனவிலங்கு மறுவாழ்வு மையம் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் காயமடைந்த வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக 230 ஏக்கர் பரப்பளவில் வனவிலங்கு மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. கூடலூரில் பிடிபட்ட ஆட்கொல்லி புலியை இந்த மையத்திற்கு கொண்டு வந்து, தேவையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Back to Top News
Top
September 18, 2026 at 9:52 AM
பற்கள் உடைந்த ஆட்கொல்லி புலி.! இனி வேட்டையாட முடியாததால் சென்னைக்கு கொண்டு வர திட்டம்
Polimer News