ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கு மட்டுமின்றி, விமானம் மூலம் துபாய்க்கும் பூக்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேவை அதிகரித்ததால், கோவை பூ மார்க்கெட்டில் பூ விலை சற்று உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ 600 ரூபாய்க்கும், முல்லைப்பூ கிலோ 400 ரூபாய்க்கும், ரோஜா மலர்கள் ஒரு கட்டு 240 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.