தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நாகர்கோயிலில் அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள திரையரங்கிலும் முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில், விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் திரண்டனர். ரசிகர்களுடன் பள்ளி மாணவ, மாணவியரும் சீருடையில் திரையரங்கிற்கு வந்தனர். ஆனால், இந்த திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு 'A' (18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே காண அனுமதி) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால், 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்ற விதிமுறையின் அடிப்படையில், மாணவர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து, திரையரங்க நிர்வாகம் மாணவர்களை திருப்பி அனுப்பியது. இதனால் முதல் நாளிலேயே திரைப்படத்தை பார்க்கும் ஆர்வத்துடன் வந்திருந்த பள்ளி மாணவ, மாணவியர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். திரையரங்குகளில் 'A' சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை 18 வயதிற்கு குறைவானவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வந்தாலும் அனுமதிக்க முடியாது என்பது தணிக்கைக் குழுவின் நடைமுறையாகும்.