கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக ஹெலிகாப்டர் வட்டமிட்டதால் பொதுமக்கள் அச்சம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாக பறந்து வட்டமிட்டது. மூஞ்சிக்கல், எம்.எம்.தெரு, சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 4 முறை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வட்டமிட்டதால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்தனர். கே.பி.எஸ் என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தளத்தில் இறக்கியும், மீண்டும் ஹெலிகாப்டர் பறந்ததாகவும் கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் அனுமதி பெற்று பறந்ததா அல்லது அனுமதி இல்லாமல் பறந்ததா என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Back to Top News
Top
July 27, 2026 at 10:41 AM
கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக ஹெலிகாப்டர் வட்டமிட்டதால் பொதுமக்கள் அச்சம்.
Polimer News