தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பாக சென்னையில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரட்டூரைச் சேர்ந்த கருணாநிதி, சாலிகிராமத்தைச் சேர்ந்த சரவணன், பள்ளிக்கரணையைச் சேர்ந்த வினோத் வெங்கடேசன் ஆகியோரை பிடித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் இருந்து 2 கோடியே 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சதி திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட நரேஷூடன் இவர்கள் 3 பேரும் தொடர்பில் இருந்ததாக போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹவாலா பணமா? எனவும் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.