சென்னை R.K. நகர் கடை எண்: 02EA007NC என்ற நியாயவிலைக் கடையில், மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசியை மூட்டை மூட்டையாக இரு சக்கரவாகனத்தில் வைத்து கடத்தி எடுத்துச்சென்று இட்லி தோசைமாவு அரைக்கும் கடையில் விற்கும் வீடியோ வெளியாகி உள்ளது. ஜே ஜே நகர் பகுதியை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி நிவேதா என்பவர் இன்ப்த அரிசி கடத்தல் குறித்து நேரடியாக சென்று வீடியோ எடுத்து முதலமைச்சரின் தனிப்புகார் பிரிவுக்கும், அமைச்சர்கள வெங்கட்ரமணன்,மரிய வில்சன் ஆகியோருக்கு இந்த வீடியோ ஆதாரங்களை புகாருடன் அனுப்பியுள்ளார்.