அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு கார் உற்பத்தி நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி (Mathew Godleweski) தலைமையிலான உயர்மட்டக் குழுவினர்,சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்துப் பேசினர். சென்னை அருகே மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் ஃபோர்டு கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, ஃபோர்டு நிறுவனத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான 30 வருட உறவை நினைவுகூர்த்த முதலமைச்சர் விஜய், அந்நிறுவனம் மீண்டும் தனது கார் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், தமிழக அரசு சார்பில் அனைத்து ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.