சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூகநீதி மாணவர் விடுதியில் முதலமைச்சர் விஜய் அண்மையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் அந்த விடுதி மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இரு நாள்களுக்கு முன் முதலமைச்சர் ஆய்வு செய்தபோது, பல்வேறு குறைகளை மாணவர்கள் முன்வைத்தனர். அனைத்தையும் கூர்ந்து கேட்ட முதலமைச்சர், உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்படி, நீண்ட நாள்களாக மூடப்பட்டிருந்த வாலிபால் மைதானம் திறக்கப்பட்டுள்ளது. அத்துடன், விடுதி வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு கொசு மருந்து அடிக்கப்பட்டது. முக்கியக் கோரிக்கையான கழிவறைகளை சுகாதாரமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Back to Top News
Top
July 19, 2026 at 6:58 AM
எம்.சி.ராஜா சமூகநீதி விடுதி மாணவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றம்
Polimer News