ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் சேதடைந்த நிலையில், பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழையால் 10 பேர் உயிரிழந்ததாகவும், 5 பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கனமழையால் பல ஆறுகளில் அபாய அளவைக் கடந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் ஆறுகளின் கரைகள் உடைப்பெடுத்துள்ளன. வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.