2 தொகுதி இடைத்தேர்தல்: தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் மதுராந்தகம் தொகுதிக்கான தவெக தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார். அதேபோல், தாராபுரம் தொகுதிக்கான தவெக தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பையும் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார். மேலும், 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கண்காணிப்பாளர்களாக அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமன விவரம்: மதுராந்தகம் தொகுதி – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தாராபுரம் தொகுதி – அமைச்சர் அருண்ராஜ் இடைத்தேர்தல் கண்காணிப்பாளர்கள் – N ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல்குமார்