"ரீல்ஸ் போடுவதற்காக தான் த.வெ.க எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு வருகை.. இது சர்க்காரா? அல்லது சர்க்கஸ் கம்பெனியா?" - உதயநிதி விமர்சனம் நாளொன்றுக்கு 4 ரீல்ஸ் போட வேண்டும் என்ற மன நிலையில் தான் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்கு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், இது சர்க்காரா? அல்லது சர்க்கஸ் கம்பெனியா? என கேட்கும் அளவுக்கு தான் தவெக ஆட்சியின் செயல்பாடுகள் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.