உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். கட்டடங்களில் கொழுந்து விட்டு எரிந்த நெருப்பை அணைக்கத் தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடினர். வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ரஷ்ய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியாமல் உக்ரைன் ராணுவம் திணறி வருவதாக கூறப்படுகிறது.