காஞ்சிபுரம் அருகே கீழம்பி பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பை உடைத்துக்கொண்டு எதிர் திசையில் வந்து கொண்டிருந்த ஈச்சர் லாரி மீது கார் மோதியதில் காரில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்தனர். ஓசூரில் இருந்து சென்னை நோக்கி 5 பேருடன் சென்றபோது, கார் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் விபத்தில் சிக்கியது சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்தது. காரில் பயணித்த ஓசூரைச் சேர்ந்த மார்கெட்டிங் நிறுவன ஊழியர்களில் கலைச்செல்வி மற்றும் செல்வகணபதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஓட்டுநர் மனோகரன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.