சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம், போதுமான அளவில் குடிநீர் கிடைப்பதில்லை என்றும், வெளியில் 25 ரூபாய் கொடுத்து கேன் தண்ணீரை வாங்கிக் குடிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். உணவகம் மாடியில் உள்ளதால் ஏறிச் செல்ல சிரமமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டுப் பார்த்து திருப்தி தெரிவித்தார்