கல்லூரி வளாகத்திற்குள் இருக்கும் கல்லூரியின் ஹாஸ்டலில் ஆன்ஸிஜி தங்கி படித்து வந்தார். கல்லூரியிலும் ஹாஸ்டலிலும் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதியன்று சுதந்திர தினவிழாவை கொண்டாட, 14 ஆம் தேதி இரவு மாணவ, மாணவிகள் ஏற்பாடு செய்து கொண்டிருந்துள்ளனர். திட்டிய கல்லூரி முதல்வர் மாணவி ஆன்ஸிஜி பையில் மொபைல் போன் வைத்திருந்ததாக, கல்லூரி முதல்வர் ஷீஜா அனைத்து மாணவர்கள் மத்தியில் வைத்து கண்டித்ததோடு, அதட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மாணவி ஆன்ஸிஜி, அன்று இரவே கல்லூரியின் மூன்றாவது மாடிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்துள்ளார். நர்சிங் மாணவி தற்கொலை..! கை கால் மற்றும் உடலின் பல பாகங்கள் முறிவு ஏற்பட்டு மாணவி உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளார். இதனை கண்ட கல்லூரி நிர்வாகத்தினர் மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, சுதந்திர தினவிழா அலங்காரம் செய்தபோது தவறி விழுந்ததாக கூறி முதலுதவி சிகிச்சை பெற்றதோடு மாணவியின் பெற்றோருக்கும் இதே காரணத்தை தகவலாக கூறி வரச்சொல்லியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்து மாணவிக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது பல இடங்களில் முறிவு ஏற்பட்டிருப்பதும் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரியவந்தது. இதனையடுத்து மாணவியை மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மாணவியை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஆன்ஸிஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து மாணவி டார்கெட் செய்யப்பட்டாரா? கடந்த ஆண்டு பெத்லகேம் தனியார் நர்சிங் கல்லூரி ஹாஸ்டலில் தரமற்ற உணவு வழங்கியதால், மாணவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, மாணவி ஆன்ஸிஜி சக மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தியதாகவும், அதுகுறித்து பேசியதாலும் கல்லூரி நிர்வாகம் அவரை வேண்டும் என்றே தொடர்ந்து டார்கெட் செய்து டார்ச்சர் செய்து வந்ததாகவும் மாணவர்கள் மத்தியில் கூறப்படுகிறது. கல்லூரி முதல்வர் தலைமறைவு..! மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து மாணவியின் தாயார் சோனியா கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், கல்லூரி முதல்வர் ஷீஜா தலைமறைவான நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றனர். பத்மநாதபுரம் சப்- கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் ஆகியோரும் சம்மந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்ஸிஜி உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பு பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ட்ரெண்டாகும் #JusticeForAnsiji உயிரிழந்த மாணவி ஆன்ஸிஜிக்கு நீதி கிடைக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும், மாணவிக்கு ஆதரவாக பதிவிட்டு, #JusticeForAnsiji என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.