ஈரான் உடனான போர் முடிவை நோக்கி செல்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். வட கரோலினாவில் செய்தியாளர்களைச் சந்தித்த போது, ஈரான் தரப்புடன் நேரடியாக பேசியதாக கூறினார். ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள ஈரான் தீவிரமாக உள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். நியூயார்க்கில் வரும் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐநா பொதுச் சபைக் கூட்டத்தின் இடையே, சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் போருக்குப் பிந்தைய உத்திகள் குறித்து டிரம்ப் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.