தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சரத்குமார், காவல்துறையில் சேர வேண்டுமென்றால் எழுத்து தேர்வு, உடற் திறன் தேர்வு என இருப்பதை போன்று மருத்துவர்களாக சேர்வதற்கு நீட் தேர்வு அவசியம் தான் என்றார். காங்கிரஸ் ஆட்சியில் 13 தடவை வினாத்தாள் கசிந்ததாகவும், இதற்கு முன்பு இது நடக்காத சம்பவம் கிடையாது என்றும் அதற்காக நீட் இருக்கக் கூடாது என்று சொல்வது நியாயம் இல்லை என்றார் சரத்குமார். காவல்துறையில் சேர வேண்டுமென்றால் எழுத்து தேர்வு, உடற் திறன் தேர்வு என இருப்பதை போன்று மருத்துவர்களாக சேர்வதற்கு நீட் தேர்வு அவசியம், வெளிநாட்டு சதிக்கு உட்பட்டு இளைஞர்கள் சென்று விடக்கூடாது. இளைஞர்கள் எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்தியா மிக வேகமாக பொருளாதார அடிப்படையில் உயர்ந்து இருக்கிறது. இதனை பொருளாதார நாடாக இருக்கும்போது சீர் குலைக்கும் எண்ணம் இருக்கிறதா என ஐயப்பாடு எழுகிறது என்று சரத்குமார் கூறினார்.
Back to Top News
Top
July 25, 2026 at 9:28 AM
மருத்துவர்களாக சேர்வதற்கு நீட் தேர்வு அவசியம்..! - சரத்குமார்
Polimer News