ஆடி 18 விழாவை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் வாராந்திர ஆட்டுச்சந்தைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டதால் சந்தை களைகட்டியது. தலச்சேரி, சேலம் கருப்பு உள்ளிட்ட ரகங்களைச் சேர்ந்த ஆட்டுக் கிடாய்கள் கொண்டு வரப்பட்டு 5,000 முதல் 20,000 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்பனையாகின. ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றதால், சந்தைக்கு ஆடுகளைக் கொண்டு வந்த வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.