கோவையில் பெண் காவலர்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கைது செய்யப்பட்ட பட்டாலியன் பிரிவு காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புப் போலீசார் செந்தில்குமாரின் வீட்டில் சோதனை செய்து, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். விசாரணையில் அவர் தனது பெயர் மற்றும் மனைவி, உறவினர்கள் பெயரில் ஒரு கோடியே 28 லட்சம் ரூபாய்க்கு சொத்துகளை சேர்த்தது தெரியவந்தது.