கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கி வரும் இதயா மகளிர் பொறியியல் கல்லூரி விடுதியில் பேய் பிடித்ததாக கூறி மாணவியின் கையில் கற்பூரம் ஏற்றி, துடைப்பத்தால் அடித்து கொடுமை படுத்தியதாக சக மாணவிகள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொடுமைப்படுத்தியதை வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. ((சகமாணவிகளின் கொடுமை தாங்காமல் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்))