திரிணாமூல் காங்கிரசின் அதிருப்தி அணியை அங்கீகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை ஒட்டி டெல்லியில் நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்ற நிலையில், திரிணாமூல் காங்கிரசில் இருந்து விலகி தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்த 20 எம்.பி.க்களை அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் அடையாள வெளிநடப்பு செய்தனர்.