அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் வழங்குவதற்கான அறிவிப்பு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி.. அரசு பேருந்துகளில் மகளிருக்கு வழங்கும் மானியத்தைப் போல், தனியார் பேருந்துகளுக்கும் வழங்க கோரிக்கை!! நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனியார் பேருந்து சங்க முன்னாள் பொருளாளரும், பேருந்து உரிமையாளருமான சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் வழங்குவதற்கான அறிவிப்பு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்த அவர் அரசு பேருந்துகளில் மகளிருக்கு வழங்கும் மானியத்தைப் போல், தனியார் பேருந்துகளில் பயணிக்கும் மகளிருக்கும் மானியம் வழங்கினால், நாங்களும் மகளிரை இலவசமாக பயணம் செய்ய அனுமதிப்போம் என்றார் இல்லையெனில் இலவச பயண திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார் ஏற்கனவே கடந்த ஆட்சியில் நகர பேருந்துகளில் செயல்படுத்தப்பட்ட மகளிர் விடியல் பயணம் திட்டத்தால் தனியார் பேருந்துகளில் சுமார் 75 சதவீதம் பாதிக்கப்பட்டு, நாமக்கல் மாவட்டத்தில் பல பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சங்கர் , தங்கள் தாத்தா, அப்பா தொடங்கிய தொழில் அழிந்து விடக்கூடாது என்பதற்காகவே தொடர்ந்து பேருந்துகளை இயக்கி வருவதாகவும் சங்கர் வேதனை தெரிவித்தார். அவருடன் சதீஷ்குமார், கிருபாகரன், கார்த்திக், மணிமாறன் உள்ளிட்ட தனியார் பேருந்து சங்க நிர்வாகிகளும் இதே கருத்தை வலியுறுத்தினர்