கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், உரிய நேரத்தில் கிடங்குகளுக்குக் கொண்டு செல்லப்படாததால் லட்சக்கணக்கான மூட்டைகள் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கிக் கிடப்பதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். காவிரி பாசன மாவட்டங்களில் தென்மேற்கு தீவிரமடைந்தால் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகிவிடும் என்று கவலை தெரிவித்த அவர்,கொள்முதல் நிலையங்களில் இட வசதி இல்லாததை காரணம் காட்டி, கடந்த பத்து நாள்களாக நெல் கொள்முதல் பணி முடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் அரவை ஆலைகளுக்கு அனுப்பிவைக்கவும், நெல் கொள்முதல் தடையின்றி நடப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
Back to Top News
Top
July 17, 2026 at 8:15 AM
கிடங்குகளில் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கம்..! - அன்புமணி
Polimer News