ஆன்லைனில் பொதுமக்கள் தங்களது சுய விவரங்களை தாங்களே பதிவு செய்யும் வகையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழகத்தில் தொடங்கியது. தமிழகத்தில் இரண்டு கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. முதற்கட்ட கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரை நேரடி முறையில் நடைபெறுகிறது. ஆன்லைன் முறையில் இன்று தொடங்கி இம்மாத இறுதி வரை கணக்கெடுப்பு நடைபெறும். அதன்படி https://se.census.gov.in என்ற இணையதளத்தில் சுய விவரங்களை பொதுமக்கள் சமர்பிக்க வேண்டும். சுய விவரங்கள், வீடுகளில் உள்ள வசதிகள் உள்ளிட்ட 33 கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்படும். காலை 6 மணி தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை ஆன்லைன் கணக்கெடுப்பு நடைபெறும்.
Back to Top News
Top
July 17, 2026 at 5:56 AM
தமிழகத்தில் ஆன்லைன் முறையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்..!
Polimer News